சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, May 28, 2010

இரண்டாம் முழக்கத்தின் அறிக்கை..


http://t1.gstatic.com/images?q=tbn:Jvcx7gBo--_tnM:http://www.balloons.co.uk/shop/images/blue2.jpg


முழக்கம் - 2 (09/05/2010)



நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கத்தின் இரண்டாம் முழக்கம் இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச்செம்மல், பெரும்புலவர் சி.வெ. சுந்தரம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. கூட்டத்தை முன்னின்று நடத்தியவர் கவிஞர். இளங்கண்ணன் . அவர்கள். கூட்டத்திற்கு அருமையான வரவேற்புரை நல்கிச் சிறப்பித்தவர் இவ்வமைப்பின் தலைவர். கவிஞர். தஞ்சை.ம.பீட்டர். சொற்பொழிவில் சங்க கால மக்களின் வாழ்வியல் சிறப்பைப் பெரும்புலவர் எடுத்துக்கூறினார். இல்லறத்தின் அவசியம், அதனை அக்கால மக்கள் அமைத்துக்கொண்டு கடைப்பிடித்த விதம், கற்பின் மாண்பு கடைக்கோடி விலங்குகளிடமும் கடைப்பிடிக்கப் பட்டு வந்த திறம், அதனை மேற்கோள் காட்டி தவறு செய்யும் தலைவனைத் திருத்தும் தோழி கூற்றுப் பாடல் போன்றவை விளக்கப்பட்டன. கூட்டத்தில் இவ்வமைப்பின் நிறுவனர் முனைவர் சி. வெ. சுந்தரம் அவர்கள், இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களுக்கும், நிதியாளர் பாலகோபாலன் அவர்களுக்கும், தலைமை ஏற்று விழாவைச் சிறப்பித்த கவிஞர் இளங்கண்ணன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார். விழாவின் இறுதியில் தலைவர் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழா பூஙகாவில் நடை பெற்றமையால் பூங்காவுக்கு வருகை புரிந்த அனைவரும் ஏற்ததாழ நூறு பேர் வருகை தந்தனர். அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டது. அடுத்த கூட்டத்தின் அறிவிப்புடன் அனைவரும் இனிதே கலைந்தனர்.

- பொதுச்செயலாளர்

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 2



http://t1.gstatic.com/images?q=tbn:Jvcx7gBo--_tnM:http://www.balloons.co.uk/shop/images/blue2.jpg


நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 2

நாள்: 09.05.2010

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்
இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச் செம்மல்,
பெரும்புலவர் முனைவர்
சி.வெ.சுந்தரம் அவர்கள்


வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!













முதல் முழக்கத்தின் அறிக்கை..


http://t1.gstatic.com/images?q=tbn:CJ1xNrbYBZrL6M:http://tinatinmusic.files.wordpress.com/2009/03/animated-number-1-award-for-blog.jpg

செந்தமிழ் முழக்கம் - 1 (நாள் 08/04/2010)

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கத்தின் முதல் முழக்கம் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. வரவேற்புரையை இவ்வமைப்பின் நிறுவனர் சைவ நெறிச் செம்மல், பெரும்புலவர் சி. வெ. சுந்தரம் அவர்கள் நிகழ்த்தினார். இவ்வமைப்பைப் பற்றிய ஒரு குறிப்புரையை இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சங்க இலக்கியம் எவை? சங்க இலக்கியத்தின் அமைப்பு முறைகளான திணை அமைப்பு முறை, முதல், கரு, உரிப்பொருள்கள், சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட அடிப்படை (அடிகளை வரையறையாக) பாடிய புலவர்கள், பெயர் அறியபடாத புலவர்களை அப்பாட்டில் அமைந்த தொடர் அடிப்படையில் பெயரிட்டு அழைத்தமை (உதாரணமாக.. குப்பைக்கோழியார், அணிலாடு முன்றிலார்) பாடல்களின் பொருட் சிறப்பு போன்றவற்றை கேட்போர் மனம் ஏற்கும் வண்ணம் எடுத்துரைத்தார். சிறப்புச் சொற்பொழிவாளர் பேராசியர் அரங்க இராமலிங்கம் அவர்க்ளுக்கு இவ்வமைப்பின் நிறுவனர் முனைவர். சி. வெ . சுந்தரம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். நிறுவனர் முனைவர் சி. வெ. சுந்தரம் அவர்களுக்கு இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். நிகழ்ச்சியின் இறுதியாக இவ்வமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் தாமோதரன் அவர்கள் நன்றியுரை நல்கினார். விழாவுக்கு தமிழறிஞர் குழு உட்பட ஏறத்தாழ் நாற்பது பேர் வருகை தந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் இனிப்பும் தேனீரும் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவரிடமும் அவர்களின் மேலான கருத்துரையுடன், முகவரி, மற்றும் தொலைபேசி எண்களைப் பதிவு செய்து கொண்டபின்பு இனிதே கூட்டம் கலைந்தது.



- பொதுச்செயலாளர்

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 1

http://t1.gstatic.com/images?q=tbn:CJ1xNrbYBZrL6M:http://tinatinmusic.files.wordpress.com/2009/03/animated-number-1-award-for-blog.jpg

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 1

நாள்: 08.04.2010

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
காமராசர் சாலை
சென்னை 600 078

முதல் முழக்கத்தை நிகழ்த்துபவர்

சங்க இலக்கியங்களைத் தெள்ளிதின் ஆய்ந்து
முனைவர் பட்டம் பெற்ற,
சென்னை பல்கலை கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தின்
தமிழ்த்துறைத் தலைவர்

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள்

வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

(சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்)

நோக்கம்: உயர் தனிச் செம்மொழியாம் தமிழை உலகெலாம் கொண்டு செல்லுதல்

செயல்முறை: மாதம் ஒரு சங்க இலக்கியக் கூட்டம் மாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாலை 6 மணிக்குத் தொடங்கி 7.30 மணிக்கு நிறைவு பெறும்.

இவ்வமைப்பு அரசியல், சமயம், மதம் ஆகிய கட்டுகளுக்குள் அடங்காது, சங்க இலக்கியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது.

சங்க இலக்கியம் எனப்பெறும் பதினெண் மேல்கணக்கு மற்றும் சங்கம் மருவிய கால இலக்கியம் எனப்பெறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெருமை, வரலாறு, ஒப்பாய்வு, இலக்கிய நுட்பம் போன்றவற்றை முத்தமிழில் (சொற்பொழிவு, நாடகம், இசை) வெளிப்படுத்த, பொது மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பெறும்.

முன்னுரையாக ஒருவர் ஐந்து மணித்துளிகள் முதல் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அறிமுக உரை நிகழ்த்துவார். தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளர் ஒரு மணி நேரம் முதல் ஒன்றே கால் மணி நேரம் வரை உரை நிகழ்த்துவார். சிறப்புச் சொற்பொழிவாளரின் உரை முடிந்தவுடன் ஒரு நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுக்கு வரும்.

அமைப்பு முறை:

இந்தச் சங்க இலக்கிய கூட்டத்தில் தமிழைத் தவிர வேறு ஒன்றின் புகழ் பாடுவதில்லை.

ஆசிரியர் குழு:

சொற்பொழிவை ஆய்ந்து அதனைப் பதிப்பிற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என ஆய்ந்து அறிக்கை கொடுக்க நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் தமிழறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தமிழறிஞர் குழுவின் மேலான வழிகாட்டுதலில் தொடர்ந்து செயல்கள் மேற்கொள்ள்ப் பெறும்.

சொற்பொழிவு தேர்வு முறை:

ஒவ்வொரு பேச்சாளரும் தட்டச்சு செய்யப் பெற்ற அல்லது தெளிவாகக் கையால் எழுதப்பெற்ற சொற்பொழிவுத் திரட்சியை (கட்டுரையை) அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். ஆண்டுக்கொருமுறை இச்சொற்பொழிவுகள் அட்ங்கிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பெறும்.

பைந்தமிழ்ச்சோலை பணிகள்:

சங்கப் பணிகள் பின்னாளில் தேவைக்கேற்ப மேலும் விரிவு செய்யப்பெறும்.

கட்டணம்:

உறுப்பினர்களுக்கென்று தனிக் கட்டணம் எதுவும் இல்லை. பெயர் , இருப்பிட முகவரி, மற்றும் கைப்பேசி எண் ஆகியவை மட்டும் பெறப்படும். உறுப்பினர்களின் பெயர்கள் வலைப்பதிவில் இடம்பெறும்.

- பொதுச்செயலாளர்.


தொடர்பு க்கு
ப. பானுமதி
18/3, லோடஸ் ஆர்கெட்
ரத்னா நகர்
விருகம்பக்கம்
சென்னை- 600 092.
தமிழ்நாடு
இந்தியா.
கைப்பேசி- 99412 98850

மின்னஞ்சல்
neithalcholai@gmail.com
innilaa.mullai@gmail.com