சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, November 26, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 9

நாள்: 05.12.2010 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை

இராம. சு. சிவகுமாரன், M.A.,M.Phil.,M.Ed.,
தலைமை ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
கலசப்பாக்கம், திருவண்ணாமலை.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர். முனைவர். பெ.கி.பிரபாகரன்,
தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.
செயலாளர், இலக்கிய வட்டம், கலைஞர் நகர், சென்னை.


தலைப்பு:

திரைப்பாடல்களில் சங்க   இலக்கிய செல்வாக்கு


சங்கத் தேனருந்த வாரீர்!!
 பொங்கு தமிழின்பம் காணீர்!! 
தொடர்புக்கு

முழக்கம் எட்டின் அறிக்கை....

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் எட்டாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் 07.11.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப.பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்புப் பேச்சாளர், முன்னிலை வகிப்பவர், சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து பைந்தமிழ்ச்சோலையின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி.வெ. சுந்தரம் அவர்கள் சோலையின் நோக்கம், அதன் செய்ல்பாடுகள், அதன் வளர் நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவானதொரு விளக்கம் கொடுத்தார்.

அடுத்து பேரா. முனைவர் சேதுராமலிங்கம் அவர்கள் உடுப்பதும் உண்பதும் தனியுடைமை, ஈதல் பொது உடைமை, எனவே ஈதல் இசைபட வாழ்தலே உயிருக்கு ஊதியம் என்றுரைத்தார். செய்யுட்களில் வரும் ஏகாரம் அதன் சிறப்பு கருதி நீட்டி ஒலிப்பதைத் திருமூலரின் திருமந்திரப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டி (உள்ளம் பெரும் கோயில்..... மணிவிளக்கே........) ஏகாரத்தின் தெளிவை விளக்கினார். மேலும் திருப்பாவையில் வரும் ’ஏலோரெம்பாவை’ என்ற சொல்லுக்கு ‘ஏல் ‘ என்றால் ஏற்றுக்கொள் ‘ஓர்’ என்றால் ‘ஆராய் ’ எனவே ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள் என்று ஆண்டாள் கூறுவதாக விளக்கம் கொடுத்தார்.

முன்னிலை வகித்த பேரா. முனைவர். ப. கி. பிரபாகரன் அவர்கள் பேசுகையில் “சென்னையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய வட்டம் தொடங்கியவர் முகம் மாமணி. இதன் பின் நூலகர் வாசகர் வட்டம், சித்தர் இலக்கியம், இலக்கிய சோலை என்று இப்போது கலைஞர் நகரில் இலக்கியம் செழித்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இலக்கியங்கள் எளிமைப் படுத்தப் பட்டால் மட்டுமே பாமரர்களைச் சென்றடையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, வாலியின் பிறந்த நாளில் கலந்து கொண்ட வைரமுத்து வாலி வெற்றி பெற்ற அளவுக்குத் தான் வெற்றி பெறாததற்குக் காரணம் இலக்கியங்களைப் படித்துவிட்டு வந்ததால். வாலியின் பாடல்கள் பாமரர்களைச் சென்று அடைந்துள்ளது. தன் பாடல்கள் பாமரர்களைச் சென்றடைய வில்லை என்று கூறியதைக் கூறி பட்டுக்கோட்டையாரின் பாடல்களின் வெற்றிப் பின்னணியும் எளிமையும் பாமரத்தனமுமே என்று கூறினார்.

சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர். இர. பாபு ராஜன் தாஸ் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவில் புறநானூற்றுப்பாடல்களை இசையுடன் பாடிக்காட்டியது சிறப்பாக அமைந்திருந்தது. புறநானூற்றுப் பாடலான “யாதும் ஊரும் யாவரு கேளிர்” என்று தொடங்கும் பாடலைப் பாடிய போது, சுவைஞர்கள் பலத்த கரஒலியுடன் மீண்டும் ஒரு முறை பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்தனர்.

சொற்பொழிவின் இறுதியில் பைந்தமிழ்ச்சோலையின் பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் சொற்பொழிவில் இருந்து சில வினாக்கள் எழுப்பப்பட்டு, சரியான விடை பகர்ந்தவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கப் பட்டன.

வினாக்கள்:
அ। கருவாட்டின் பெயர் என்று சொற்பொழிவாளர் குறிப்பிட்டது என்ன?
ஆ। ஆண்பெயரில் அமைந்த புதுவகையான நெல் எது?
இ। ஒரு முகம் வள்ளியொடு நகையாடியது என்ற பாடல் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?

சரியான விடையைச் சொல்லி பரிசைப் பெற்றவர்கள்:
திருமதி. செல்வராணி
திரு த. ஆத்மன்
திரு. வெ. சீனுவாசன்

முறையான நன்றியுரையை பேரா।முனைவர் நீலா செல்வராஜ் அவர்கள் வழங்கினார்.
விழாவின் இடையில் வருகை தந்திருந்த அனைவருக்கும் இவ் அமைப்பின் சிறு தொண்டன் (இளவல் பாலாஜி) இன்சுவை பணியங்களை வழ்ங்கினான்.

பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் அடுத்த கூட்டத்தின் அறிவிப்பு செய்யப் பட்டது. வந்திருந்த அனைவரிடமும் கையொப்பமும் அலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு அனைவரும் இனிதே பிரியா விடை பெற்றனர்..


சொற்பொழிவில் பெறப்பட்ட கருத்துக்கள்:
தலைவியைக் கண்டு வந்த செவிலி நற்றாயிடம் தலைவனும் தலைவியும் தங்கள் குழந்தையை இடையில் படுக்க வைத்துக் கொண்டு உறங்கும் காட்சி கலைமானும் பிணைமானும் குட்டி மானை இடையில் படுக்க வைத்து படுத்துறங்குவது போல இருந்தது। இக்காட்சி அந்த விண்ணுலகிலும் கிடைக்காத காட்சி என்று வியந்து கூறுவதை “மறியுடன் படுத்த மான் பிணை போல” எங்க சங்கப் பாடலை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டது।

தலைவனும் தலைவியும் பிரிவிலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்த இல்லற மாண்பு “நீரின்றி அமையாது உலகு”என்ற குறுந்தொகைப் பாடலுடன் விளக்கப் பட்டது।

மக்கள் நடமாட்டம் இல்லாத் இடத்தில் ஆவினங்கள்,பெண்கள், முதியோர், குழந்தைகள், பார்ப்பனர், மகவீனாதார், நோய்வாய்ப்பட்டார், அங்கக்குறைபாடு உடையோர் ஆகியோரை முதலில் ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்த பின்னரே போர் செய்தல் அன்றைய போர் முறை என்பதை
“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்” என்று தொடங்கும் நெட்டிமையார் பாடலை மேற்கோள் காட்டி விளக்கப்பட்டது।
அக்காலத்தில் பெண்கள் வம்புகள் பேசினர்। இதற்கு அம்பல் அலர் என்று பெயர்। இவையும் காதலர்களை ஒன்று சேர்க்கவே பயன் பட்டன।

தலைவனும் தலைவியும் பிறவிகள் தோறும் சேர்ந்து வாழ விரும்பினர் என்பது ‘இம்மை மாறி மறுமை யாகினும் யானே யாகுவன் நின் நெஞ்சு நேர்பவள்” என்று கூறும் சங்கத் தலைவியின் கூற்றான குறுந்தொகை அடிகளால் விளக்கப்பட்டது.

புகைப்படங்கள்













Saturday, November 6, 2010

நன்றி... நன்றி... நன்றி... நன்றி..

செந்தமிழ் முழக்கம் சிறக்க வாழ்த்திய தமிழ் நெஞ்சங்கள் கலைநிலா, தஞ்சை வாசன், கலைவேந்தன், ராஜா, மணிஅஜித் அனைவருக்கும் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை சார்பின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்..

வாழ்த்துச்செய்தியைக் காண  இங்கே செல்லவும்.


- பொதுச்செயலாளர்.

Wednesday, November 3, 2010

http://img429.imageshack.us/img429/7582/diwali3500du.jpg

உலகெங்கும் வாழும் 
தமிழர்கள் அனைவருக்கும், 
அகமும் புறமும் 
அறிவொளியும் 
தீப ஒளியும் பெருகிட  
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் 

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்..