சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, December 24, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTWDPoOOBuatuBlCggZG5qfo_5Lt3fpY7MDII_7DiUpMRmUmhy9WA

நாள்: 02.01.2011 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை 
பாலகோபாலன் M.A.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர்.
முனைவர். P. அண்ணாதுரை  
தமிழ்த்துறை
 மார் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி, 
முகப்பேர், சென்னை.

தலைப்பு:

புறப்பாடல்களில் காணலாகும் சமுதாய மேன்மை.

சங்கத் தேனருந்த வாரீர்!!
 பொங்கு தமிழின்பம் காணீர்!! 
தொடர்புக்கு

ஒன்பதாம் முழக்கத்தின் அறிக்கை..

Monday, December 13, 2010

முக்கிய அறிவிப்பு

துணைத்தலைவர்  நியமனம்:
12.12.2010 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் செந்தமிழ் முழக்கத்தில் பைந்தமிழ்ச் சோலையின் துணைத்தலைவராக திரு. தஞ்சை வாசன் அவர்களை நிறுவனத் தலைவர் பெரும்புலவர் முனைவர் சி.வெ.சுந்தரம் முன் மொழிந்தார்.  பேராசிரியர். முனைவர். சேதுராமலிங்கம் அவர்கள் அதனைத் வழிமொழிந்தார். அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒருமனதாகத் தஞ்சை வாசன் அவர்களைத் துணைத்தலைவராகத் தேர்ந்து எடுத்தனர். அவருக்கு நிறுவனத் தலைவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துச் சொன்னார். 

தஞ்சை வாசன் அவர்களின் சீரிய தொண்டில் இப்பதவி பெருமை  அடையவும்!   மேன்மேலும் உயரவும் இளஞ்சிறுத்தை தஞ்சை வாசன் அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலை அமைப்பாளர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT5ghJAk6dhSZjmHDGDDt8lj6ApDYs8qcvh11zt-fXfbuhr0oM-

- பொதுச்செயலாளர்.