சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Sunday, July 11, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 5



http://members.home.nl/hickling/images/pinkrose4.gif
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 5

நாள்: 01.08.2010
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
முனைவர். பெ. இலக்குமி நாராயணன்,
துறைத்தலைவர், தமிழ்த்துறை, 

டி. ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி,
அரும்பாக்கம், சென்னை.
.
சொற்பொழிவாளர்:
திருவாசகத்தென்றல், பேராசிரியர், முனைவர்,   
அ.மு. மாலதி  எம்.ஏ., எம்..ஃபில்., பிஎச்.டி., 
பேராசிரியர், தமிழ்த்துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை. 
அவர்கள்

தலைப்பு: சங்க இலக்கியத்தில் உவமைகள்

அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!
http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif

Sunday, July 4, 2010

நான்காம் முழக்கத்தின் அறிக்கை..

செந்தமிழ் முழக்கம் - 4 நாள்: 04/07/2010

http://t0.gstatic.com/images?q=tbn:Yw8UJkG4nHur6M:http://www.fishing4fun.co.uk/wp-content/uploads/2008/09/number-4-blue.jpg

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் நான்காவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குத் தொடங்கி 08.30 மணிக்கு முடிவுற்றது. விழாவுக்கு சுமார் ----பேர் வருகை புரிந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் இவ் அமைப்பின் தலைவர் கவிஞர். தஞ்சை. ம. பீட்டர் வரவேற்றார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளர் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர். புலவர். தங்க ஆறுமுகனார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உரையில் நெய்தலங்கானல் என்ற பெயர் தோன்றியது ஏன் என விளக்கினார். நெய்தல் என்பது நெசவு (நெய்தல்) என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. மண் பகுதியை நீரானது குறுக்காக பாய்ந்து செல்வது நெய்தல் என்று பெயர் தோன்ற காரணமாயிற்று என்றும் நெய்தலங்கானல் என்ற சொல் புறநானூற்றில் வழங்கி வருவதாகவும் விளக்கினார். அத்துடன் நரிவெரூஉதலையார் என்ற பெயர் அவருக்கு வழங்கிய காரணம் நரிகளும் அச்சம் கொள்ளும் அளவில் அமைந்த தலையை உடையவராதலால் அப்பெயர் பெற்றார் என்று விளக்கினார். சங்க கால மக்களின் அக ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் போது தலைவன் தான் பிரிவு மேற்கொள்வேன் என்று கூற அதனைக் கேட்ட தலைவி
”செல்லாமை உண்டெனின் எமக்குரை
நின்வல்வரவு வாழ்வார்க் குரை”
செல்வேன் என்று கூறிய மாத்திரத்தில் என் உயிர் போய்விடும். நீ விரைவில் வருவேன் என்று கூறும் செய்தியை உயிரோடு யார் இருக்கிறாரோ அவருக்கு உரை, என்று கூறிய சங்கத் தலைவியின் காதல் ஒழுக்கத்தை எடுத்துக்கூறினார்.
சங்க கால மக்களின் புற ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும்போது
“ பலசான்றீரே பல்சான்றீரே
பயனின் மூப்பின் பல்சான்றோரே”
என்று தொடங்கும் நரிவெரூஉதலையாரின் புறநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி வாழுங்காலத்தில் நல்லது செய்யத் தவறினாலும் பரவாயில்லை, ஆனால் நல்லது அல்லாத செய்ல்களைச் செய்வதை விட்டுவிடவும் என்று கூறிய அறிவுரையை எடுத்துக்கூறினார். இது போல சங்கச்சான்றோரின் வாழ்வியல் கருத்துக்களை மிக அழகாக கேட்போர் மனம் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.

சொற்பொழிவின் இடையில் சென்ற மாத முழக்கத்தில் இருந்து கேட்கப்பட்ட இரு வினாக்களுக்குச் சரியான் பதிலை அளித்த திரு. வேணுகோபாலன் அவர்களுக்கு ஒரு கையடக்க திருவாசகப் புத்தகமும்,  பள்ளி மாணவன், இ. பாலாஜி க்கு ஒரு சிற்றுண்டிப் பெட்டகமும் இவ்வமைப்பின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி. வெ. சுந்தரம் ஐயாவால பரிசாக வழங்கப்பட்டன.
அப்போதே வந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டன.
பொழிவின் இறுதியில் அடுத்த மாத்திற்கான பரிசுக்குரிய இரு வினாக்கள் இவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் கேட்கப்பட்டன.
இவ் அமைப்பின் இணைப்பொதுச்செயலாளர் பேராசிரியர் தாமோதரன் அவர்களால் முறையான நன்றியுரை வழங்கப்பட விழா இனிதே நிறைவேறியது. வழக்கம் போல வந்திருந்த அனைவரிடமும் கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு கூட்டம் இனிதே கலைந்தது.


-பொதுச்செயலாளர்.