சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, September 18, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 7


http://www.fotosearch.com/bthumb/CSP/CSP227/k2271608.jpg

நாள்: 03.10.2010 நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
இன எழுச்சிக் கவிஞர்.  
நெல்லை இராமச்சந்திரன்.
சொற்பொழிவாளர்:
முனைவர். இராம. வேணுகோபாலன்,
முதல்வர்,
 மார்க் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி,
முகப்பேர், சென்னை.



தலைப்பு:: சங்க இலக்கியத்தில் நகைப்பு


http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif


அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

 




ஆறாம் முழக்கத்தின் அறிக்கை....

    நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஆறாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம்  05/09/10 அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.

    முழக்கத்தில் முகப்பில் அன்று ஆசிரியர்தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நல்லாசிரியர்களாக மாணவர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த முனைவர். பெரும்புலவர். சி.வெ.சுந்தரம், முனைவர் சேதுராமலிங்கம், முனைவர். இராம. வேணுகோபால், முனைவர். பெ. இலக்குமி நாராயணன் ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து முறையான வரவேற்புரை பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது.

முழக்கத்திறகுச் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். இராம. வேணுகோபாலன் முன்னிலை வகித்தார். அவர் உரையாற்றும் போது தொல்காப்பியத்தில் விளக்கம் பெற வேண்டிய இடங்களாக (அடியோர், வினைவலர் ஆகியோரிடம் ஐந்திணை ஒழுக்கம் இடம்பெறாது போன்ற) சிலவற்றைக் குறிப்பிட்டு அதன் விளக்கங்களைப் பேராசிரியர் பெ. இலக்குமி நாராயணன் தர வேண்டுமென் அன்புடன் பணித்தார்.

    டி. ஜி. வைஷ்ணவா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. இலக்குமி நாராயணன் சிறப்புரை ஆற்றினார்.

    சொற்பொழிவுக்கு திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. எட்வின், பெங்களூருவில் இருந்து தஞ்சை வாசன் ஆகியோர் உட்பட சுமார் 40 பேர் வருகை புரிந்து இருந்தனர்.

    முழக்கத்தின் இடையில் வருகை புரிந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டது.

     சிறப்புப் பேச்சாளர் உரையில் இருந்து பொதுச்செயலாளர் அவர்களால் சில் வினாக்கள் எழுப்பப்பட்டு வந்திருந்தவர்களிடம் விடைகள் பெறப்பட்டன. சரியான விடையைச் சொன்ன நால்வருக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

சிறப்புப் பேச்சாளரின் உரையிலிருந்து பெறப்பட்ட வாழ்வியல் நுட்பங்கள்.

  • ஐவகை நிலப்பாகுபாடு, பாலை பற்றி தனி விளக்கம், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றிய தெளிவான விளக்கம்.
  • கைக்கிளையின் பெயர்க்காரணம், தனிச்சிறப்பு, 
  • களவுக்காதல் அனைத்தும் எதிராளியின் இசைவைப் பெறும் வரை கைக்கிளையே.
  • பெருந்திணையின் பெயர்க்காரணம், நன்மையும் தீமையும். 
  • பெருந்திணை ஒழுகலாறு அன்பின் ஐந்திணை ஒழுகலாறாக மாற்றம் பெற  வேண்டியதன் அவசியம்.
  • அடியோர், வினைவலர் ஆகியோரிடம் ஐந்திணை ஒழுக்கம் இடம்பெறாது என்று உரையாசிரியர்கள் கூறிய கருத்து  முரண்.
  • ’செவ்வி’ என்ற  சொல்லின் விளக்கம் இல்லற இன்பம் நிறைவு பெறுதலே.
  • நிலம் மாறலாம்; காலம் மாறலாம்; கருப்பொருள் மாறலாம்; உரிப்பொருள் மாறக்கூடாது.
  • அகச்செம்மையே புறச்செம்மைக்குக் காரணமாக அமையும்.
  • மாட்சியில் பேரியோரை வியத்தல் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை.புறநானூற்றுக் கருத்து.


                                                                                                                 - பொதுச்செயலாளர்.